அச்சுப் பிசகாமல் அதே மொழிநடையில்...கொல்வதெழுதுதல் -90.
கே.முஹம்மத் சுஐப்...தமிழ்நாடு
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
கிழக்கிலங்கை இஸ்லாமிய மக்களின் துயர வாழ்க்கையையும்...போரினால் அவர்கள் பட்ட துயரத்தையும் ..அவர்களை பிரதிநிதப்படுத்தும் அரசியலாரின் அவலங்களையும் ஒருங்கே சொல்லும் கதை..
பள்ளிமுனை (அப்படி ஒரு கிராம் இருக்கிறதா..?கற்பனையா ..?ஆசிரியரே..?) கிராமத்துக்கு இஸ்லாமியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்..தலைவர் எம் எச் எம் இஸ்ஹாக்கின் வருகையை ஒட்டி ஆரம்பிக்கும் கோலாகலத்தோடு ஆரம்பமாகும் நாவல்...அதே கிராமத்துக்கு இஸ்ஹாக்கின் தொண்டன் முத்து முகம்மது அதே பாராளுமன்ற உறுப்பினரக திரும்புதலோடு நாவல் முடிகிறது..
எல்லாக் கட்சிகளிலும் இருக்கும் இருக்கும் அப்பாவித் தொண்டனைப் போலவே முத்து முகம்மதும் இஸ்லாமியக் கட்சியின் தொண்டனாக இருக்கிறான்...
அவன் காதல்வயப்படும் மைமூனாவுடன் மைமூனாவின் சவூதி பயணத்திற்காக அவளது தாயுடனும்..தம்பியுடனும் கொழும்பு பயணிக்கிறான்..சப்பு சுல்தான் என்ற ஒரு அயோக்கியனை சவூதி ஏஜெண்டாகக் கொண்டு சவூதி புறப்படும் தயாராகும் மைமூனாவின் சொந்த பாதுகாவலுக்காகவே அவர்களுடன் முத்து முகம்மதும் கொழும்பு பயணிக்கிறான்...
ஆனால் பெண் பித்தனான சப்பு சுல்தான் ஒரு பொய்யைச் சொல்லி முத்து முகம்மதையும் மைமூனாவின் தம்பி யாசினையும் தலைவர் வீட்டுக்கு அனுப்பி வைத்து அந்த நேரத்தில் தனிமையில் இருக்கும் மைமூனாவை மயக்க மருந்து கொடுத்து அனுபவித்து விடுகிறான்..
-இதெதல்லாம்...சவூதிக்குச் சென்ற பிறகு அங்கிருந்து மைமூனா பேசி அனுப்பும் கெசட் வழியாகத்தான் முத்து முகம்மதுக்கு தெரிய வருகிறது..அதிலிருந்த சப்பு சுல்தான் மீது முத்து முகம்மது வன்மம் கொள்கிறான்...பணம்..ஆயுதம்...இயக்க உதவிகள் என அலைந்து திரியும் சப்புசுல்தான நெருங்குவது அவ்வளவு எளிதல்ல..!
இதற்கிடையே கொழும்பில் தலைவர் வீட்டில் தங்கும் முத்து முகம்மது தலைவரோடு வெளியே செல்லும் போது நடைபெறும் ஒரு துப்பாக்கிச் சூட்டில் தலைவரை் காப்பாற்றப் போக அவனது நாலுவிரல்களை இழக்கிறான்.தலைவர் ஆச்சர்யமாக உயிர்தப்புகிறார்...!!
அந்த நன்றிக் கடனுக்காக முத்துமுகம்மதை தலைவர் பள்ளிமுனை பிரதேசச்சபை செயலாளராக்குகிறார்..
மறுபடியும் அதிகாரத்தோடு பள்ளிமுனை திருமபும் முத்து முகம்மது சவூதி சென்ற தன் ப்ரியத்துக்குரிய மைமூனாவையும் மறக்கவில்லை.அவளை வஞ்சகம் செய்த சப்பு சுல்தானையும் மறக்கவில்லை.
நாவல் முழுக்க கிழக்கிலங்கை பேச்சுத் தமிழில் அழகாகாகப் பயணிக்கிறது...அதுவும் ஏழை எளிய இஸ்லாமிய மக்களின் பேச்சுத் தமிழை நவ்சாத் அச்சுப் பிசகாமல் அதே மொழி நடையோடு எழுதி இருக்கிறார்...நாவல் முழுக்க ஒரு கிண்டல் தொனி தெரிகிறது...
நான் இலங்கை தமிழ் முஸ்லி்ம்களை அவர்களது முன்னொட்டு பட்டவெறிக்காக எப்பவும் கிண்டல் பண்ணுவேன்..(கவி பூஷணம்...கவி ரட்னம்..அமுதக் கவி...இப்படி...எக்ஸ்ட்ரா...எக்ஸட்ரா...)
அதையே இந்நாவலில் நவ்ஷாத்தும் குறையின்றி செய்திருக்கிறார்...புரட்சி மௌலவி புழைல்...பள்ளிக்குயில் பளீல்...ஆசு கவி ஆப்டீன்...இப்படி பலரையும் இலங்கை இஸ்லாமியர்களுக்கே உரிய பட்ட வெறியை உயரிய நயத்தோடு கேலி பண்ணுகிறார்..ஏன் நாவலின் கதாநாயகன் முத்து முகமதுவையே அவர் கிண்டல் பண்ணத் தவறவில்லை.மளேசியா வாசுதேவன் பாடலை அடிக்கடி அதே குரலி்ல் பாடுவதால் அவனையும் கேலி பண்றார்..
சரி...இலங்கையில் வசிக்கும் இஸ்லாமியர்களிடையே இந்த நாரே தக்பீர்...அல்லாஹூ அக்பர் என கோஷமிடும் பழக்க மிருக்கிறதா...?
அதைப் போலவே அங்கு தலைவர்களின் காலில் விழுந்து வணங்கும் பழக்கமும் இருக்கிறதா...? அதுவும் முஸ்லி்கள்...?முஸ்லிம் தலைவர்கள் கால்களிலேயே...?
இது நாவலில் ஆங்காங்கே சரளமாக வருகிறது...நம்ப மனம் மறுக்கிறது.அல்லது...தமிழக அரசியலை பகடி பண்ணும் நோக்கோடு நவ்சாத் இதை நாவலில் எழுதினாரா..?அவரே விளக்கினால் நன்றாக இருக்கும்...!
நாவலில் தலைவர் என நவ்ஷாத் வர்ணிக்கும் அந்தப் பாத்திரம் (எம் எச் எம் இஸ்ஹாக் ) முன்பு இலங்கையில் முஸ்லிம்களின் பெருவாரி ஆதரவைப் பெற்றுத் திகழ்ந்த மர்ஹூம். அஸ்ரபின் சாயலையும் ஒத்திருக்கிறது.
இதனாலும் மேற்கண்ட கேள்விகளின் முக்கியத்துவம் கூடுகிறது.
மைமூனாவின் கெசட்டால் பாதிக்கப்பட்ட முத்து முகம்மது சப்பு சுல்தானின் கதையை முடிக்க எண்ணுகிறான்...ஆவேசம அவன் உடல் முழுக்க ரத்தச் சூடு மாதிரி பரவுகிறது..
இதற்கிடையே சப்பு சுல்தானின சில கேடு கெட்ட செயலுக்காக புலிகளும் அவனைக் குறி வைக்கின்றனர்...
ஒரு நாள் நள்ளிரவு சப்பு சுல்தானின் ஆயுளை முடிக்கும் நோக்கோடு முத்துமுகம்மது அவனது வீட்டுக்குச் செல்ல...அவனுக்கு முன்பே சப்பு சுல்தானின் கதையை புலிகள் முடித்து விட்டுச் சென்றதை அறிந்து முத்து முகம்மது பதட்டமடைகிறான் ..எப்படியோ ஒரு கயவனின் கதை முடிந்து விட்டது.
நாவல் இங்கு முடிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
ஆனால்...சப்பு சுல்தானை முத்து முகம்மதுவே கொன்று விட்டான் என தலைவருக்கு செய்தி போகுது...
தலைவர் அவனை கூப்பிட்டு விசாரிக்கவே முத்து முகம்மது மைமூனாவுக்கு கொழும்பு யூ.கே லாட்ஜில் நடந்த சம்பவம் முதற்கொண்டு தான சப்பு சுல்தானைக் கொல்லப போன விஷயம் வரை எலலாவற்றையும் விவரமாக ஔிவு மறைவின்றிச் சொல்கிறான்...தலைவரும் அதை உளமார நம்புகிறார்..
முன்பு நடந்த ஒரு தேர்தற் பிரச்சினையில் "இன்னது நடக்கவில்லை என்றால் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமாச் செய்வேன்..." என பொதுக்கூட்ட மேடையில் சவால் விட்டிருந்தது தலைவருக்கு திடீரென ஞாபகம் வரவே தனது பதவியை ராஜினாமாச செய்ய இதுவே தருணமென்று முடிவெடுத்து ராஜினாமாச் செய்து முன்பு தனது உயிர்காத்த இடத்தில் முத்து முகம்மதுவை அந்த காலி இடத்திற்கு எம் பியாக்குவதோடு நாவல் நிறைவு பெறுகிறது..!!
ஆக...ஒரு சாதாரண அப்பாவித் தொண்டன் இங்கு எம்பியாக உயர்கிறான்...!
இதனால்....நாவலின் கடைசிப் பகுதி சற்று நாடகத் தன்மையோடு முடிவு பெறுவது மாதிரித் தெரிகிறது .இதை நவ்சாத் தவிர்த்திருக்கலாம்...
மற்றபடி கிழக்கிலங்கையின் ஒரு அரசியல் நாவல் என இதைக் கொள்ளலாம்.
ஒரு ஓப்பீட்டில் பார்த்தால் ..தமிழக அரசியலுக்கும் இலங்கை அரசியலுக்கும் பெரிய வேறுபாடுகள் எதுவும் இருப்பதாகவும் தெரியவில்லை...தலைவர் எம்பி பதவியை ராஜினாமாச் செய்வது ஒன்றைத் தவிர....!!!
(இங்கே சாகக் கிடந்தாலும் எவனும் பதவியை ராஜினாமாச் செய்வதில்லை..)மிக எளிய தமிழில் சிக்கலின்றி எழுதப் பட்டிருக்கும் நல்ல நாவல்.
தீரன் நவ்ஷாதுக்கு நமது பாராட்டுக்களும் .வாழ்த்துக்களும்..!!!
R.M. Nowsaath
#காலச்சுவடு_பதிப்பகம்
#நாகர்கோவில்
No comments:
Post a Comment