டீச்சர் எனக்கு கோல் பண்ணி
"ஷஃபா புத்தகம் கொண்டு வந்து வாசிக்கிறா 'கொல்வதெழுதலாம் ...என்ன புத்தகம் அது, நீங்களா கொடுத்துவிட்டிங்க ? என்று டீச்சர் கேட்கிறா நான் தடுமாறிட்டேன் .
"எக்ஸாம் முடிஞ்சுதானே இன்டக்கி சும்மாதானே உக்காந்திருக்க போறன் நேத்து அரைவாசிய வாசிச்சிட்டன் டீச்சர் நல்ல இன்ட்ரஸ்டான கத டீச்சர் அதுதான் கொண்டு வந்தேன் என்றாளாம் "
உண்மையா எனக்கிது தெரியாது .
இரவு வாசிச்சிட்டிருந்தத கண்டேன் ஸ்கூலுக்கு எடுத்துப்போவாள் என்று நான் நினைக்கல இத டீச்சர்ட சொல்ல முடியுமா
சொரி டீச்சர் நான் அத கவனிக்கல. எதையாவது வாசித்துக்கொண்டிருப்பா, லைப்ரரிலயும் மெம்பரா சேர்ந்திருக்காள் .
இது நான் வாசிப்பதற்காக வாங்கிய புத்தகம்தான் டீச்சர் ஆர்வத்துல ஸ்கூல்கு எடுத்து வந்திருக்காள் போல.. என்று சமாளிச்சிட்டன் .
இந்த வாரம் திங்கற்கிழமைR.M. Nowsaath இன் "கொல்வதெழுதல் 90" புத்தகத்தை சப்றி அனுப்பி வைத்திருந்தார். 'பனி' வாசிப்பிலிருந்ததால் கொல்வதெழுதலை உடனே வாசிக்க முடியல .
குரவை என்றால் என்ன ,
லாத்தா என்று யார சொல்ற
குர்தா உடுப்பு எது ?' 'குளறத் தொடங்க ' என்டு இருக்கேமா அப்படி என்டா?'
என்று இன்னும் சில சொற்களுக்கும் விளக்கம் கேட்டுக்கொண்டிருந்தாள் .
காலையில் ஸ்கூல்கு ரெடியாகும் போது ஒரு பெயரைக்குறிப்பிட்டு அவர் இப்பயும் எம்பியாக இருக்காரா ? என்றொரு கேள்வி கேட்டாள் யாருமா அவர் என்றேன் அவர்தான் 'இஸ்லாமிய தேசியக்கட்சி தலைவர் 'இந்த புத்தகத்துல எழுதி இருக்கே அவர்..?' என்றாள்
நான் இன்னும் வாசிக்கலயே இன்டக்கி வாசிச்சிட்டு சொல்றன் என்று அனுப்பி வைத்தேன்
ஆனால் புத்தகப்பைக்குள் கொல்வதெழுதல் புத்தகத்தையும் சேர்த்து அடுக்கி வைத்துவிட்டுத்தான் இவ்வளவும் கேட்டிருக்கிறாள் என்பது இப்பதான் புரிந்தது...
00
No comments:
Post a Comment