கொல்வதெழுதுதல் என்னைக் கட்டிப் போட்ட நாவல். முன்பு துண்டு துண்டாகப் படித்தாலும், நூலாக வந்தபோதுதான் ஒரே மூச்சில் ஆர்வத்துடன் வாசித்தேன். தீரனிடம் நான் தோற்றுப் போனேன். நமது கிழக்கு முஸ்லிம் வாழ்வியலை - அதன் உள்ளார்ந்த சமூக அரசியலை - பலங்களயும் பலவீனங்களையும் - தீரனைப் போல் அழகாகக் கொண்டு வந்தவர்கள் வெகு சிலர்தான்.
இந்த நாவல் ஒரு சின்னப் பிள்ளையின் மனசைக் கொள்ளை கொள்ளும் ஆற்றல் வாய்ந்ததாய் இருப்பதில்
நான் பெருமிதம் கொள்கிறேன்.
இதைப்பற்றி தனியொரு மதிப்புரை எழுத வேண்டும் என்றும் எண்ணியிருந்தேன். இதுவரை சாத்தியப்படவில்லை.
ஷஃபாவின் அந்தக் கேள்விகள் மிக முக்கியமானவை.
கதையோட்டத்துக்குள் சரியாக உள்நுழைந்திருப்தன் அடையாளங்கள் அவை.
நெஞ்சார்ந்த
வாழ்த்துக்கள் தீரன் R.M. Nowsaath. ஒரு படைப்பாளனுக்கு இதைவிட சந்தோஷம் எது?
No comments:
Post a Comment