Thursday, November 24, 2022

பிஸ்தாமி அஹமட்

 பிஸ்தாமி அஹமட்..

முகநூலில்


நூலின் அரசியல் தளம் குறித்த விசேட பார்வை


முகப்பு அட்டைப்படமே


அரசியல் மேடையில் அதிரடி உரை நிகழ்த்தும் இஸ்லாமிய கோலத்திலான

ஒரு மகத்தான தலைவர் குறித்த பார்வையை தருவதாக உள்ளது என்பதை நினைவில் கொள்க.... 


மேற்படி


நூல்

போறாளிகளே புறப்படுங்கள்....

ஓரத்தில் நின்று கொண்டு ஓய்வெடுக்க நேரமில்லை


என்று உசுப்பேத்தி

உஷ்ண வார்த்தைகளால் உசாராக்கி

கட்சி பக்தர்களை கிண்டி கிளறி விட்டவாறு ஆரம்பித்து..... அடுத்து

கொழும்பில் என்ன என்ன நடக்கும்

எங்கு வெடிக்கும்

என்ற தகவலை எதிர்பார்க்க வைப்பது போல

அடுத்தடுத்த பக்கங்களை

புரட்ட வைக்கும்


இலங்கை பெரும்பான்மை

ஆளும் மற்றும் எதிர்தரப்பு பேரின வாத அரசியலுக்குள்


மாட்டின் மீது ஒட்டுண்ணி அமர்ந்து மாட்டையே உறிஞ்சிக்குடித்து வாழ்வது போல....  அரசியல் சாயம் பூசிக்கொண்டவர்களும்

தலைவர்களை

ஒட்டி முதுகு சொரிந்து

காரியம் சாதிக்க முற்படுவதை காணலாம் 


கிழக்கிலே மையமிட்டு முகாமிட்டு

வாக்கும் பெற்று

அரசையே தீர்மானிக்குமளவு

தகைமை பெற்ற

King maker ஆக இருந்த இஸ்லாமிய கட்சி

குறித்தான ஒரு புரிதலை இது தருவதாக உள்ளது... 


அதன் தலைவர்

பக்தர்கள்

வால்பிடிகள்

முதுகு சொரிபவர்கள்

வக்காளத்து வாங்குவோர்

அண்டிப்பிழைப்போர்

நக்கிப்பிழைப்போர்


என

பலரையும் கொண்டு வருகிறது


கிழக்கரசியல்

கொழும்பரசியல்

கட்சி அரசியல் என அத்தனையும்

ட்ரான்ஸ்பெரன்ஸியாக

நகர்கிறது


முத்துமொம்மதுவின்

காதலும்

கட்சி அரசியல் மீதான தாவலும்

தவிப்பும்

அமேஸிங் தான்


அரசியல் எவ்வளவு ஆழமாக ஊடுருவி மக்களை வழிநாடாத்துகிறது


அல்லது வாழவிடாமல் வதைக்கிறது...


அடிமைச்சேவகம்

புரிய சிலர்


ஆவேசம் பொங்க சிலர்


குழி வெட்ட சிலர்


கொதிக்க சிலர்....


அடிமாடுகளாகவே

அடுத்த தலைமுறையை

பாவிக்க சிலர்.....


இப்படி... அரசியல் குறித்தான ஊதிப்பெருப்பிக்கப்பட்ட...

தகரக்கப்பட்ட


சூம்பிப்போன பிம்பங்கள்.....


முத்துமொம்மதையும்

யாசீனையும்

கொழும்பில் ஆட்டோ சாரதியிடம் சிக்க வைத்து மைமூனாவையும்

உம்மா வையும் எயா போட் அழைதுதுச்செல்ல

ஓடும் சப்பு.......


கும்பிட போன தெய்வம் 

குறுக்கே வந்ததா கதையாக மாறிய

சம்பவம்....


இறுதியில்

பிரதேச சபை தேர்தல் வரை முத்து மொம்மதுவை

ஒசத்தி வைக்கிறது...


பின்ன என்ன

ஸெய்லான் ஹாஜியார்


யாரு...... 

பள்ளித்தலைவருக்கு

வர்ர கோவம்.... ப்பா....

கொறுக்கப்புளியன்..... என கடிந்து சாடி உமிழும்.... காட்சிகள்.... அரசியலில்

சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி... வரம் கொடுக்காத.... நிலை தான்.....


அந்த செய்லான் ஹாஜியாருக்கு கன்னத்துல பளார் என ஓங்கி அறைந்து....


வயற்சேனை ஆஸ்பத்திரி விஸ்தரிப்புல

37 ஏக்கர் வேப்பமரத்தோப்ப விழுங்கியது....

பள்ளி புனரமைப்பில்

30 லச்சம் விழுங்கியது என


ஒவ்வொன்றாக

தலைவர் கக்கிவிடுவது


எல்லா கட்சியிலும் இருக்கும் அப்பட்ட அடிமட்ட அரசியல்....


ஆனால் தலைவர் நீதி நேர்மை நியாயம்

தகைமை க்கு முதலிடம் என தூய அரசியல் செய்வது சபாஷ் தான்


போராளிகளே புறப்படுங்கள் என ஆரம்பித்து....


ஆளடையாளமற்ற

முத்து முகமது


இலங்கை இஸ்லாமிய கட்சியின் பிரதித்தேசிய அமைப்பாளராகி....


பள்ளி முனை இளைஞர் அணி தலைவராகி.... முன்னாள் வயற்சேனை பிரதேச சபை தலைவராகி...


தற்பொழுது திகாமடுல்ல மாவட்ட பாராள மன்ற உறுப்பினராகி உயர்ந்துள்ள முத்துமொகமது தனது ஆசை நாயகி மைமூனாவுடன்

வருவதை காட்சிப்படுத்தும் இறுதி பந்தி

வரிகள்


நௌஸாத் ஸேரின் தூக்கலான அரசியல் எழுத்தின் ஆழத்தை தான் உணர்த்துகிறது


நூலின் அரசியல் பற்றிய

நீளமான மனப்பதிவை எழுத இருந்தாலும்


வாய்ப்பு அமையவில்லை.... நூலை வாசித்தவர்கள்.... நட்புகள் உரையாடலை நீட்டவும் என எதிர் பார்க்கப்படுகிறீர்கள்


No comments:

Post a Comment