கொல்வதெழுதல் 90:
நெளசாத் நாவல் என்னிடம் பலகாலமாக இருந்தது . அதை எனக்கு படிக்க கருணாகரன் சிபார்சு செய்தார். முழுமையான அரசியல் பின்னணி கொண்ட நாவல் .
படித்தபோது மனத்திருப்தியை ஏற்படுத்தியது. கிழக்கு மாகாண சோனக மொழி எந்த தடையுமில்லாது அருவியாக ஓடுகிறது .
தேவதை கைபிடித்து எழுதியதோ எனக்கு பொறமையை அளித்தது.
எஸ்போவின் பின்பாக என்னைக் கவர்ந்த மொழிநடை.
பின்பு விபரமாக எழுத நினைக்கிறேன்
Rajaji Rajagopalan நௌஸாத் நாவலை இவ்வளவுக்குப் புகழ்ந்துவிட்டு பின்பு விபரமாக எழுதுகிறேன் என்று சொல்லித் தப்பவா பார்க்கிறீர்கள்? விரைவாக எழுதுங்கள், டாக்டர்.
Maana Mackeen அன்றைய "தாருல் இஸ்லாம்" வாங்கிக்கொடுத்து எழுதப்பழக்கிய அன்புத்தந்தையின் அருமைப்பெயரைச் சூட்டியிருக்கிறார் நாயகனுக்கு அறிந்தோ அறியாமலோ...!?
Dr.Muttiah Kathiravetpillai Muruganandan கிடைக்கவில்லை.
படிக்க வேண்டும் என்று ஆவலாக இருக்கிறது.
Vadakovy Varatha Rajan படிக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறீர்கள்
Jiffry Haasan நௌஸாத்தின் நட்டுமை படித்தீர்களா?
அது இதைவிட ஒரு படி மேல் என்று நினைக்கிறேன்.
கிளியுங் கிளியும் கிண்ணரம்.
Dr.Muttiah Kathiravetpillai Muruganandan நண்பர்@slm haniffa கொடுத்ததில் நட்டுமை படிக்க முடிந்தது. அருமையான படைப்பு
கிளியுங் கிளியும் கிண்ணரம் மற்றொரு நாவலா?
கொல்வதெழுதல் 90 இப்பொழுதும் விற்பனைக்கு இருக்கிறதா
Vadakovy Varatha Rajan Jiffri Hassan
கிளியும் கிளியும் கிண்ணாரம். தலைப்புகள் போகம் எனவரும் .இரடடை அர்த்தத்தில் எடுக்கலாம் . யானகிராமனின் தஞ்சாவூர் கதைகளை படித்த மன உணர்வை தந்த நாவல் பின்நோக்கிய களத்தில் அற்புதமாக பின்னப்பட்டுள்ளது. முடிவு திருப்தியாக எனக்கு படவில்லை . சற்று சினிமாதத்தனமான முடிவு
Noel Nadesan No I will
K S Mohammed Shuaib நல்ல நாவல். நானும் படித்திருக்கிறேன்...
Adam Iyoobkhan கொல்வதெழுதல்90. தேவதை கைபிடித்து எழுதியதோ,,,,,.என எழுதி ஏனய்யா பின்பு விபரமாக எழுதுகிறேன் , என விட்டுவிட்டீர்,,,,
உபைத்துல்லா மூதூர் அவருடைய வெள்ளிவிரல் சிறுகதைத்தொதியை படித்துப் பாருங்கள்
No comments:
Post a Comment