நவீனத்தில் உண்மை அதிகம்.கற்பனை கொஞ்சம்!
'90களில் கிழக்கிலங்கைக் காரைத்தீவுப் பகுதியில் முஸ்லிம் கிராமங்களில் தம்பிமார் ஊடாட்டம்,இந்தியப்படை நடமாட்டம், இடையே ஒரு பிரதேச சபைத் தேர்தல். பள்ளிமுனைப் பகுதியில் மலேசிய வாசுதேவன் பாட்டுகளைப் பாடி துடிதுடிப்போடு திரிந்த முத்து முகம்மது இளைஞனை பள்ளிமுனைக்குத் தலைவனாக்குகிறார் ஒரு கட்சித்தலைவர்.அவர் தனித்வமான தலைவராகப் போற்றப்படுபவர்.
பின் அவரே அவனை திகாமடுள்ள நாடாளுமன்றப் பிரதிநிதியாக்கி அருந்தொண்டாற்ற வைக்கிறார்!
****தீரன் ஆர்.எம்.நெளஷாத் நவீனத்தில் உண்மை அதிகம்.கற்பனை கொஞ்சம்!
***'முஸ்லிம் குரல்' தொடர் நவீனம் (2003).தமிழகக் 'காலச்சுவடு' 2013-17 இருதடவை நூலுருவம்.
*** நூல் மட்டுமல்ல, தனித்வத் தலைவரும் முத்து முகம்மது பெயரும் என் நினைவலைக ளில் சதா
00
லைட் ரீடிங்### கிழக்கிலங்கையிலும் ஒரு 'தோப்பில் முகம்மது மீரான்'!
**************
சமீப காலத்தில் படு படு வேகமாக ஒரு நாவலைப் படித்தேன் என்றால் 'கொல்வதெழுதல்-90' ஒன்று மட்டுமே! (தமிழகக் காலச்சுவடு பதிப்பு 2013.மீள் பிரசுரம் 2017. ஆரம்பத்தில் 2003-ல் பெளஸர்-நூறுல் ஹக் ஆசிரியர்களாக வெளியிட்ட "முஸ்லிம் குர"லில்).
தன் ஆரம்பகால எழுத்துகளுக்கு ஏணிப்படி' -என என்னை வர்ணிக்கும், கிழக்கிலங்கை, சாய்ந்தமருது தீரன் R.M. Nowsaathத்திற்குள் 'ஒரு தோப்பில் முகம்மது மீரான் உள்ளார் என்பதை இந்நாவலை 15 ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டும் நேற்று வாசித்த பிறகே உணர்ந்தேன். தமிழக எழுத்தாளர்கள் - குறிப்பாக முஸ்லிம் படைப்பாளிகள்- இதைப் பார்வையிடல் "காலத்தின் கட்டாயம்".(சில சமயங்களில் தோப்பிலுடன் கீரனூர் ஜாகீர் ராஜாவும் எட்டிப்பார்க்கிறார்!).