Saturday, December 9, 2017

டி.எம். சப்ரி


உயிரோட்டமான நாவல்



"கொல்வதெழுதுதல் 90"
1990 களின் போர்க்கால இலக்கிய மரபை ஒட்டியதாகவும் கிழக்கிலங்கையின் முஸ்லிம் கிராமங்களின் கையறு நிலையையும், விடுதலைப் போராட்டத்தின் பக்க விளைவுகளையும் மிகவும் எளிமையான முறையில் கண் முன்னே கற்பனை ரீதியாக உணர வைக்கும் சாய்ந்தமருதுவைச் சேர்ந்த ஆர்.எம்.நௌஸாத் என்ற எழுத்தாளரின் ஓர் படைப்பு.


அன்றைய காலப் பகுதியில் ஏராளமான ஆயுதக் குழுக்கள், காரணமில்லாத கொலைகள், கண்ணிவெடி, மிதிவெடி, ஹர்த்தால், கடையடைப்பு, ஆள்கடத்தல்,பணிமுடக்கம், காட்டிடக்கொடுப்பு போன்ற
 பக்க விளைவுகள் மக்களை வாட்டிக் கொண்டிருந்தது.

கிழக்கிலங்கையின் பள்ளிமுனைக் கிராமத்தைச் சேர்ந்த முத்துமுகம்மது
 இலங்கை இஸ்லாமிய கட்சியின் தீவிர ஆதரவாளன்.
பள்ளிமுனைக் கிராமத்தின் அரசியல் மேடைகளில் முழங்கும் "போராளிகளே புறப்படுங்கள்" என்ற கோஷங்கள் பூவரச மரங்களில் தொங்கவிடப்பட்டிருக்கும் தலைவரின் படங்கள், மஞ்சள் பச்சை வர்ண கொடிகள், சோடனைகள், மின்விளக்குகள் என்று 90களின் அரசியல் மேடை அமைப்பு அற்புதமானவை.
இதற்கும் மேலாக தலைவர் வருகையை ஐம்பத்து நான்காவது தடவையாக ஸ்பீக்கரில் அறிவிப்பு செய்யும் முத்துமுகம்மது.
முத்துமுகம்மதின் முறைப்பெண்ணான "மைம்னா"வை வறுமை காரணமாக வெளிநாடு செல்ல அவளின் தாயார் கட்டாயப்படுத்துகிறாள்.

தங்கை மார்களுக்கு வீடு கட்டுவதற்கு வெளிநாடு செல்ல கொழும்பு சென்ற மைம்னா சப்பு ஏஜன்சியால் கொழும்பு லொஜ்ஜில் வைத்து கற்பழிக்கப்படும் காட்சிகள் எதார்தமாக அமைந்துள்ளது.
அதன் பின்னர் கல்வியறிவோ சிங்களமோ தெரியாத முத்துமுகம்மது 
ஒரு சந்தர்ப்பத்தில் கொழும்பில் தலைவரின் உயிர் காக்கிறார்.

இதனால் பள்ளிமுனை பிரதேச சபைத் தேர்தலில் பல்வேறு தர்ப்பினர்களின் எதிர்ப்பையும் மீறி 
தலைவரால் முத்து முகம்மது வேட்பாளராக களமிறக்கப்படுகிறார்.
தேர்தல் கால மரபுகள் பழிவாங்கல்கள் ஏமாற்றங்கள் காதலியின் பிரிவு
 என்று உயிரோட்டமாக நாவலின் கதை நகர்கிறது.

00 

Tuesday, November 7, 2017

Saturday, June 10, 2017

மிஹாத்


Mihad Mihad

தோழர் தீரன். ஆர்.எம் நௌஷாத், அனுப்பி வைத்த அவரது நாவலான
" கொல்வதெழுதுதல் 90 " கிடைக்கப் பெற்றேன்.
இனவாத அரசியலும் இனவெறி ஆயுதக் குழுக்களின் அட்டூளியங்களும் மலிந்திருந்த தொண்ணூறுகளில் நிலவிய ஒரு கிராமத்தின் கதை......
பல கொடிய நினைவுகளை வாசக மனவெளியில் மீண்டும் தரிசிக்கச் செய்யும் புனைவுச் செயல்.
வாசித்து முடித்த பிறகு இந்தப் பிரதி மீதான எனது பார்வையை எழுத வேண்டும் எனும் ஆவல் இருக்கிறது.

தீரன். ஆர்.எம் நௌஷாத்

Mihad Mihad--Lafees Shaheed--Annogen Balakrishnan-- இது ஒரு ஹீரோயிஸ நாவல் என்றும்...சினிமாவுக்குத்தான் லாயக்கு என்றும் விமர்சித்தனர்....பார்வைகள் வேறுபடல் இயல்பே.... என் நோக்கம் 1990 களில் முஸ்லிம்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளையும் அச்சமயம் அவர்கள் செய்த அரசியலையும் ஒரு புனைவாக வெளிப்படுத்த வேண்டும் என்பதே...புனைவுத் தயாரிப்பில் ஹீரோயிசத்தை கொஞ்சம் கூடுதலாகவே கலந்து விட்டேனோ தெரியாது..அநோஜனின் பார்வை எனக்கு உற்சாகம் தந்தது....மிஹாத்தின் சொற்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நன்றிகள் நண்பர்கள் மூவருக்கும்...


Tuesday, May 16, 2017

Nawfeer Atham Lebbe & Miraz Ahamed

தீரன். ஆர்.எம் நௌஷாத் அவர்களின் நாவல் "கொல்வதெழுதல் 90" கிடைக்கப் பெற்றேன். சு. ரா வின் காலச்சுவடிலே பதிப்பிக்கப்பட்டது. மிகவும் நேர்த்தியான நாவல். இன்ஷா அள்ளாஹ் வாசிப்போம் தீர விமர்சிப்போம்.
அவரே அனுப்பி வைத்தார். நன்றிகள் பல கோடி நட்புக்கு

80 -90களின் முஸ்லிம் அரசியலைப் பற்றி பேசும் முக்கிய நாவல். இந்த நாவலில் நான் அதிகம் ரசித்தது நாவல் பூராக இழையோடிருக்கும் நக்கல் கலந்த மெல்லிய நகைச்சுவையை.

Wednesday, April 12, 2017

அபு ரசா


Abu Raza
April 11 at 1:10pm


தீரன். ஆர்.எம் நௌஷாத் எழுதிய கொல்வதெழுதுதல் 90 வாசிக்கக் கிடைத்தது. இந்நாவலை காலச்சுவடு பதிப்பித்திருந்தது. 2003 காலப்பகுதியில் முஸ்லிம் குரல் பத்திரைகையில் தொடராக வெளிவந்திருந்தது. ஏலவே நட்டுமை நாவலும் வெள்ளிவிரல் சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்து பல விருதுகளைப் பெற்றிருந்தது.
1990 களில் கிழக்கிலங்கை முஸ்லிம் கிராமங்களில் தலைவிரித்தாடிய அட்டூழியங்களின் சிறு பகுதியை சுவாரஷ்யமான தனது எழுத்தினால் ஆவணப்படுத்தியுள்ளார் ஆசிரியர். பேச்சு வழக்கும் மக்களின் உணர்வு பூர்வமான எண்ணங்களையும் கருவாகக் கொள்கிறார். எமது அரசியலின் ஆரம்பப் பரிமாணங்களை அப்படியே ஒப்புவித்து வெற்றியும் கண்டுள்ளார். அழகான கிராமிய மனம் கமழும் காதலையும் நாவலின் ஆரம்பம் முதல் கடைசி வரை ஆழமாக வேரூன்றச் செய்யப்பட்டுள்ளது.

தெகிட்டாமல் ஒரே மூச்சில் வாசித்துவிடக் கூடிய அற்புதமான நாவல்களில் கொல்வதெழுதுதல் 90 ம் ஒன்றென்று சொன்னால் மிகையில்லை.
முத்து முஹம்மது எனப்பட்ட கிராமத்து இளைஞனின் வாழ்வில் இடம்பெறும் அன்பு மற்றும் அரசியல் நகர்வுகள் படம்பிடிக்கப்பட்டுள்ளது.
கட்டாயம் இல்லையெனினும் ஒவ்வொரு வாசகனும் வாசித்து பயன்பெறக் கூடிய அற்புதமான மொழிநடை கொண்ட நாவல்.
வாசியுங்கள் நிச்சயம் உங்கள் மனதில் அது ஒரு மூலையிலாவது அப்பியிருக்கும்.

Tuesday, January 10, 2017

சிங்கப்பூர் நூலகத்தில்

  • 1/9, 12:54pm
    Abubacker Siddique
    உங்களின் புத்தகம் சிங்கப்பூர் நூலகத்தில் பார்த்தேன், இந்த புத்தகம் என்னிடம் ஏற்கனவே இருக்கிறது, நீங்கள் என் தந்தைக்கு பரிசளித்து அவர் எனக்கு கொடுத்தது
  • (கடையநல்லூர் சேயன் இப்ராஹீம் அவர்களின் புதல்வர்.)