Saturday, November 5, 2016

facebook comments

Abdul Rasak Abdul Rasak 
கொல்வதெழுதுதல் தவிர்க்கமுடியாத நாவல். இதை அப்போதிருந்தே வழிமொழிந்து வருகிறோம். சில விமர்சகப் பேராசிரியர்களின் மேம்போக்கான வாசிப்பினாலும் பொடுபோக்கினாலும் ஒரு கட்டத்திற்கு மேல் கொல்வதெழுதுதலை அவர்கள் கூட்டிச்செல்லவில்லை. ராமகிருஷ்ணன் பேசுகிறார், சாஜித் பேசுகிறார் என்றதும் இப்போதுதான் நாவலை வாசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
மிக்க நன்றி அப்துல் ரசாக்..... இந்நாவல் தமிழ் நாடு அரசின் தெரிவில் 1000 பிரதிகளுக்கான நூலக ஆணை கிடைத்தது...... மேலும் 2014இன் இலங்கை சாஹித்திய விருதுக்கான போட்டியில் இறுதிச் சுற்றுக்கு தெரிவானது...ஆயின் இதன் உள்ளடக்கம் கிழக்கு முஸ்லிம் அரசியல் என்பதால் சில "யாழ்-விற்பன்னர்களால்" ஒதுக்கப்பட்டது...நம்ம "பேராசிரியர்களாலும்" ஒரு வித்துவப் பெருமை காரணமாக கண்டுகொள்ளப்படாமல் ஆனது......இப்படி இன்னும் சில "பெரிய (?) எழுத்தாளர்களின்" புறக்கணிப்புகளாலும் பொறாமைத்தனங்களாலும் மனம் காய்ந்து போன நான் கோபத்துடன் இன்னமும் சிரித்துக் கொண்டிருக்கிறேன்......
சிரிங்க பாஸ் சிரிங்க!
இடுக்கண் வருங்கால் நகுக என்று வள்ளுவரே சொல்லியிருக்காரு!

Slm Hanifa 
ஆயிரம் நூலகங்களில் உனது நாவல் எத்துணை பெரிய அங்கீராம் வாழ்த்துக்கள் தீரன்

K S Mohammed Shuaib திருச்செந்தூர் அரசுப் பொதுநூலகத்தில் இருந்து எடுத்துதான் அதை நான் வாசித்தேன்.

Mohamed Ismail Mubaraque சீக்கிரமே வாங்கிப் படிக்க வேண்டும்...

Shafath Ahmed 
இந்தப் பதிவு தீரனின் அந்த நூலை திரும்பிப் பார்க்வைத்துள்ளது. இலக்கிய எழுத்துக்களை, சமுகப் பார்வைகளை வர்க்க கண்ணோட்டத்தோடு பார்க்கும் மேதாவிகளினால்தான் சமுக முரண்பாடுகள் தீவிரமடைகின்றன. ஆனால் காலத்தின் கட்டாயம் தீர்மானிக்கும்போது இப்படி ஆயிரம் நூலகங்களில் தீரனின் படைப்பு தலை நிமிரும்போது நமக்கெல்லாம் பெருமைதான்.. பெரு மகிழ்ச்சிதான்.
தீரன்.. நெகிழ்வுடன் வாழ்த்துக்கள்!

Waseem Akram தீரன் # இலக்கிய வீரன். வாழ்த்துக்கள்

Mohamed Sabry நான் தீரனின் எழுத்துக்களில் தீராத மோகம் கொண்டவன்.

மருதூர் ஜமால்தீன் எனக்கும் ஒருபிரதிதரவேண்டுமே

கடைகளில் கிடைக்காததால், உங்கள் வீடு தேடி வந்து கொல்வதெழுதுதல் வாங்கிச் சென்றேன். முஸ்லிம் குரலில் தொடராக வந்தபோதே வாசித்த முன் அனுபவம் உண்டு.

தீரன், கதையோட்டத்தினூடே கிழக்கு முஸ்லிம்களின் மூக-அரசியல் மாற்றத்தை அற்புதமாகப் பதிவு செய்திருக்கிறீர்கள்.

எங்களைப் போன்றவர்கள் கட்டுரைகளாக வரைந்தவற்றை, நீங்கள் நாவல் தளத்தில் படைப்பு வீச்சோடு நிகழ்த்திக் காட்டியிருக்கிறீர்கள்.

புத்தத்தைப் படித்தவுடனேயே, உங்களுக்கு இந்த நாவலால் நெருக்குவாரங்கள் வரவில்லையா என்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டேன்.

இது பற்றி தனியாக எழுத வேண்டும் என்றிருந்தேன். நடைமெறைச் சிக்கல்களால் காலதாமதமாகி விட்டது.
Unlike · Reply · 1 · 3 mins



Friday, November 4, 2016

தமிழ் மிரர்.

தமிழ் மிரர். --இலக்கியப் பகுதி- 02.11.2016

விகடன்

விகடன்- தடம் இலக்கியப் பகுதி  06.08.2016
-------------------------
2000க்குப் பின் வெளிவந்த  சிறந்த நாவல்கள் பட்டியல்.
எஸ்.ராமகிருஷ்ணன் 


ஏ .எம். சாஜித்

தினகரன்  நாளிதழ் - முத்தாரம் பகுதியில் (2016.11.05-சனி )
ஏ .எம். சாஜித்