Thursday, December 8, 2016

ஊடகங்கள்

காலச்சுவடு 



தேனீ -இணையம் 





தினக்குரல்  



தினகரன் 




 சுடர் ஒளி 

Saturday, November 5, 2016

facebook comments

Abdul Rasak Abdul Rasak 
கொல்வதெழுதுதல் தவிர்க்கமுடியாத நாவல். இதை அப்போதிருந்தே வழிமொழிந்து வருகிறோம். சில விமர்சகப் பேராசிரியர்களின் மேம்போக்கான வாசிப்பினாலும் பொடுபோக்கினாலும் ஒரு கட்டத்திற்கு மேல் கொல்வதெழுதுதலை அவர்கள் கூட்டிச்செல்லவில்லை. ராமகிருஷ்ணன் பேசுகிறார், சாஜித் பேசுகிறார் என்றதும் இப்போதுதான் நாவலை வாசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
மிக்க நன்றி அப்துல் ரசாக்..... இந்நாவல் தமிழ் நாடு அரசின் தெரிவில் 1000 பிரதிகளுக்கான நூலக ஆணை கிடைத்தது...... மேலும் 2014இன் இலங்கை சாஹித்திய விருதுக்கான போட்டியில் இறுதிச் சுற்றுக்கு தெரிவானது...ஆயின் இதன் உள்ளடக்கம் கிழக்கு முஸ்லிம் அரசியல் என்பதால் சில "யாழ்-விற்பன்னர்களால்" ஒதுக்கப்பட்டது...நம்ம "பேராசிரியர்களாலும்" ஒரு வித்துவப் பெருமை காரணமாக கண்டுகொள்ளப்படாமல் ஆனது......இப்படி இன்னும் சில "பெரிய (?) எழுத்தாளர்களின்" புறக்கணிப்புகளாலும் பொறாமைத்தனங்களாலும் மனம் காய்ந்து போன நான் கோபத்துடன் இன்னமும் சிரித்துக் கொண்டிருக்கிறேன்......
சிரிங்க பாஸ் சிரிங்க!
இடுக்கண் வருங்கால் நகுக என்று வள்ளுவரே சொல்லியிருக்காரு!

Slm Hanifa 
ஆயிரம் நூலகங்களில் உனது நாவல் எத்துணை பெரிய அங்கீராம் வாழ்த்துக்கள் தீரன்

K S Mohammed Shuaib திருச்செந்தூர் அரசுப் பொதுநூலகத்தில் இருந்து எடுத்துதான் அதை நான் வாசித்தேன்.

Mohamed Ismail Mubaraque சீக்கிரமே வாங்கிப் படிக்க வேண்டும்...

Shafath Ahmed 
இந்தப் பதிவு தீரனின் அந்த நூலை திரும்பிப் பார்க்வைத்துள்ளது. இலக்கிய எழுத்துக்களை, சமுகப் பார்வைகளை வர்க்க கண்ணோட்டத்தோடு பார்க்கும் மேதாவிகளினால்தான் சமுக முரண்பாடுகள் தீவிரமடைகின்றன. ஆனால் காலத்தின் கட்டாயம் தீர்மானிக்கும்போது இப்படி ஆயிரம் நூலகங்களில் தீரனின் படைப்பு தலை நிமிரும்போது நமக்கெல்லாம் பெருமைதான்.. பெரு மகிழ்ச்சிதான்.
தீரன்.. நெகிழ்வுடன் வாழ்த்துக்கள்!

Waseem Akram தீரன் # இலக்கிய வீரன். வாழ்த்துக்கள்

Mohamed Sabry நான் தீரனின் எழுத்துக்களில் தீராத மோகம் கொண்டவன்.

மருதூர் ஜமால்தீன் எனக்கும் ஒருபிரதிதரவேண்டுமே

கடைகளில் கிடைக்காததால், உங்கள் வீடு தேடி வந்து கொல்வதெழுதுதல் வாங்கிச் சென்றேன். முஸ்லிம் குரலில் தொடராக வந்தபோதே வாசித்த முன் அனுபவம் உண்டு.

தீரன், கதையோட்டத்தினூடே கிழக்கு முஸ்லிம்களின் மூக-அரசியல் மாற்றத்தை அற்புதமாகப் பதிவு செய்திருக்கிறீர்கள்.

எங்களைப் போன்றவர்கள் கட்டுரைகளாக வரைந்தவற்றை, நீங்கள் நாவல் தளத்தில் படைப்பு வீச்சோடு நிகழ்த்திக் காட்டியிருக்கிறீர்கள்.

புத்தத்தைப் படித்தவுடனேயே, உங்களுக்கு இந்த நாவலால் நெருக்குவாரங்கள் வரவில்லையா என்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டேன்.

இது பற்றி தனியாக எழுத வேண்டும் என்றிருந்தேன். நடைமெறைச் சிக்கல்களால் காலதாமதமாகி விட்டது.
Unlike · Reply · 1 · 3 mins



Friday, November 4, 2016

தமிழ் மிரர்.

தமிழ் மிரர். --இலக்கியப் பகுதி- 02.11.2016

விகடன்

விகடன்- தடம் இலக்கியப் பகுதி  06.08.2016
-------------------------
2000க்குப் பின் வெளிவந்த  சிறந்த நாவல்கள் பட்டியல்.
எஸ்.ராமகிருஷ்ணன் 


ஏ .எம். சாஜித்

தினகரன்  நாளிதழ் - முத்தாரம் பகுதியில் (2016.11.05-சனி )
ஏ .எம். சாஜித் 



Monday, October 24, 2016

ஜிப்ரி ஹாசன்

                                                                      Jiffry Hassan
இலங்கை எழுத்தாளர் தீரன் ஆர்.எம். நௌஸாத்தின் “கொல்வதெழுதுதல்” எனும் நாவல் 2000-க்குப் பின் வந்த முக்கியமான தமிழ் நாவல்களில் ஒன்று என பிரபல எழுத்தாளர் எஸ்.ராமகிருஸ்ணன் ஏற்றுக் கொண்டுள்ளார்.
-பார்க்க விகடன் தடம் ஆகஸ்ட் 2016 இதழில் அவர் எழுதியுள்ள தமிழ் நாவல்வெளி எனும் கட்டுரை.
விகடன்- தடம் இலக்கியப் பகுதி  06.08.2016
-------------------------
2000க்குப் பின் வெளிவந்த  சிறந்த நாவல்கள் பட்டியல்.
எஸ்.ராமகிருஷ்ணன் 

Sunday, July 10, 2016

அனோஜன் பாலகிருஷ்ணன்



நடு - மின்னிதழ் 

http://www.naduweb.net/


கொல்வதெழுதல் 90 – அலைக்கழிப்பின் நாட்கள்


அனோஜன் பாலகிருஷ்ணன் 


கிழக்கிலங்கையைச் சேர்ந்த ஆர்.எம்.நெளஸாத் எழுதிய புதினம் கொல்வதெழுதல் 90’. போர்க்காலத்தில் சாதாரண கிராமத்து இசுலாமிய இளைஞன் ஒருவனின் கதை. தொண்ணூறுகளில் கதை நிகழ்கின்றது. நாலா பக்கமும் இடம்பெறும் இன முரண்பாடுகள், மிகச்சிறிய சமூகமான இசுலாமிய சமூகத்தை அழுத்திப்பிசைகிறது. இலங்கையில் வசிக்கும் இசுலாமிய சமூகத்தின் வாழ்வியல் நெருக்கடிகளையும், அச்சமூகத்தின் கடந்தகால வரலாறுகளையும் இலக்கியப் பதிவாக எழுதப்படுவதில்லை என்ற பரிதவிப்பு இசுலாமிய சமூகத்துக்கு தொடர்ச்சியாக இருந்துவருவதுண்டு. அப்பரிதவிப்பை ஓரளவுக்கு குறைத்துவைத்திருக்கின்ற படைப்பாக்கமாக கொல்வதெழுதல் 90 நாவலைக் கருதலாம்.
கிழக்கிலங்கையிலிருக்கும் பள்ளிமுனைக்கிராமம்தான் கதையின் களம். மிகுந்த நெருக்கடியால் அவதியுறும் கிராமம். போர் அழுத்திக்கொண்டிருக்கின்றது. ஒரு பக்கம் இந்திய இராணுவமும் அவர்கள் துணைக்குழுக்களும் வன்முறையில் இருக்கின்றார்கள். இன்னுமொரு பக்கம்  புலிகள் இராணுவத்தினரோடு மோதலில் இருக்கின்றார்கள். அதன் விளைவுகள் பள்ளிமுனைக்கிராமத்தையும் வெகுவாகத் தாக்குகிறது. விவசாயத்துக்கு செல்பவர்கள் கண்ணிவெடியில் சிக்கி காலை இழந்திருக்கின்றார்கள். பாதைகளை கடக்கும்போது கண்ணிவெடிகளின் அச்சுறுத்தல்கள் நிம்தியைக் குலைக்கின்றது. இராணுவத்தினாலும் புலிகளாலும் தொந்தரவுகளை எந்நேரத்திலும் அடைய நேர்கின்றது. இறப்பு விழுந்த வீட்டில் பெரும் ஓலம் எழும்போதுகூட கேட்பவர்கள் புலிப்படை புகுந்திட்டோஎன்று யோசிக்கின்றார்கள். அவ்வாறான போர்ச்சூழலில் முடிந்தளவு இயல்புவாழ்கை என்பது சிக்கல் நிறைந்ததாக இருகின்றது. ஆனால், இந்நாவல் போர்காலத்தை முற்றிலுமாகப் பேசமுனையவில்லை. போரின் உக்கிரம் ஏற்படுத்தும் அநீதியில், இசுலாமிய மக்கள் தமக்கான அரசியல் எழுச்சியை வளர்த்தெடுக்கும் காலத்தில் அதன் அலையில் நிகழும் போர்க்காலக் காதல் கதைதான் இது. அக்காதலின் கதை வாயிலாக போரியல் சம்பவங்களும் அதன் துன்பங்களும் இலக்கியமாகப் பதியப்படுகின்றன.
முத்துமுகமதுவையும் அவனது காதலியான கிளிக்குஞ்சு மைமுனாவையும் ஒட்டிநகரும்கதை. சப்புசுல்தான் என்பவன் முத்துமுகமதுவுக்கு மிகுத்த எரிச்சலை தூண்டுபவனாக இருக்கின்றான். அவனின் மேல் பாலியல் குற்றச்சாட்டுகள் நிரம்பிவழிகின்றன. சப்புசுல்தான் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை ஊரிலுள்ளவர்களுக்கு பெற்றுக்கொடுப்பவன். மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாக வீட்டிலிருக்கும் வறுமையான பெண்களை அனுப்பிவைக்கின்றான். அனுப்பி வைக்கும் சாட்டில் கொழும்புக்கு  அழைத்துச்செல்லும்போது தனது பாலியல் இச்சைகளை தீர்த்துவிடுகின்றான் என்ற பாலியல் குற்றச்சாட்டு அவன்மீது நிரம்பிவழிகிறது. அவனின் மீதான வெறுப்பும், தனது காதலியின் உம்மா சப்புசுல்தானின் பேச்சுக்கு இசைந்து அவளை மத்திய கிழக்கு நாடு ஒன்றுக்கு அனுப்பத் தீர்மானித்து வைத்திருப்பதும் அவனை துன்புறவைக்கின்றது. அதன் அழுத்தங்கள் முத்துமுகமதுவின் பார்வையில் தொடர்கின்றன. தனது கிரமத்தையும், தனக்கு வருங்காலத் துணையாக வர இருக்கின்ற கிளிக்குஞ்சு மைனாவையும் தவிர வேறெதுவும் தெரியாத அப்பாவி இளைஞன் ஒருவனின் மனம் அலைந்துகொண்டிருக்கின்றது.
பள்ளிமுனைக்கிராமம், முத்துமுகம்மது, முத்துமுகமதுவின் காதலியான மைமுனா, அவளது தாய், மைமுனாவின் தம்பி யாஸின், பள்ளித்தலைவர், சப்புசுல்தான், இசுலாமியக்கட்சித் தலைவர் எம் எச் எம். இஸ்ஹாக், உதுமான், தேநீர்க்கடை நெய்னார், செய்லான் ஹாஜி, உதுமான் மகன் அன்வர் என்று எக்கச்சக்கமான பாத்திரங்கள் நாவலில் ஊடுபாவுகின்றன. ஒவ்வொரு பாத்திரங்களும் ஒவ்வொருவிதாமான மனநிலையைக் கொண்டவை. சிலர் மிகக்கனிவானவர்கள்; சிலர் பொறமையானவர்கள். ஒட்டுமொத்த பாத்திரங்களும் தங்கள் இயல்புக்குள் சித்திக்கின்றன. அப்பாத்திர சிருஷ்டிப்புத் திறன் நாவலை முழுமைமிக்கதாக நகர்த்துகிறது.
நாவலை வேகவேகமாக ஒரே மூச்சில் வாசிக்க முடிந்தது. வாசித்து முடித்தபோது அப்படி என்ன கவர்ந்தது என்று யோசித்தால் நாவலின் வட்டாரவழக்கு என்றே தோன்றியது. சம்பவ விவரிப்பு எழுத்து மொழியிலும், உரையாடல் வட்டாரவழக்கிலும் எழுதப்பட்டுள்ளது. அதிக நாடகீயத் தருணம் கொண்ட மிக எளிய கதைதான், ஆனால் பாத்திர வடிவமைப்பும் சிருஷ்டிப்புத்திறனும் நாவலை வேறோர் தளத்துக்கு எடுத்துச் செல்கின்றன. நாவலின் பிரதான பாத்திரமான முத்துமுகமதுவின் எளிய ஆசைகளும், பரிதவிப்பும் வெளிப்படும் இடங்கள் உச்சக்கட்ட படைப்பாக்கமாக உருவாகியிருக்கின்றன. சப்புசுல்தான் மேல் முத்துமுகமதுவுக்கு எழும் வெறுப்பும் இன்னொரு பக்கம் அழுத்தும் தாழ்வுமனப்பான்மையும் நுட்பாமக நாவலின் உள்ளுறையாக ஊடுபாவுகின்றது.
முத்துமுகமது சாதரண இசுலாமியக் குடும்பத்திலிருந்து வந்து மெல்ல மெல்ல மேல்நோக்கி எழுகின்றான். உண்மையில் எழ  வைக்கப்படுகிறான். இசுலாமிய கட்சியில் சாதாரண அடித்தொண்டனாக இருந்த அவனின் மங்கலான அறைபோன்ற வாழ்கை சட்டென்று ஒளிர்வடைகின்றது. அவன் எழுச்சி அவன் எதிர்பார்க்காதவொன்று. தனது தாழ்வு மனப்பான்மையை மறைத்துக்கொண்டு உச்சத்துக்குச் செல்கின்றான். சடுதியாக ஒரு கணத்தில் உதிர்ந்து தனது இடத்தைக் கண்டுகொள்கின்றான். ஆனாலும் அவன் முன்னேறிக்கொண்டேயிருக்கின்றான். அவனது விசுவாசம் அதனை மிக எளிமையாகப் பட்டாம்பூச்சி காற்றில் பறப்பதுபோல் நிகழ்த்திவிடுகின்றது.
பள்ளிமுனைக்கிராமம் என்பதைதவிர அவன் வேறு இடங்களைப் பார்க்காதவன். சிங்களத்தில் ஒரு வார்த்தை அறியாதவன். கொழும்பில் சப்புசுல்தானின் சூழ்ச்சியில் சிக்கி அல்லலுறும்போது மொழியின் அந்நியம் அவனைக் கொல்கிறது. ஒரு விலாசத்தை விசாரிக்கும்போது ஏற்படும் எதிர்வினைகள் அவனை மதம் கடந்து தமிழ்பேசுவனாக சித்தரிக்கிறது. முஸ்லிம் என்ற அடையாளம் காணமல்போய் மொழியடிப்படையில் தமிழன் என்ற அடையாளம் உருவாகும் தருணம் அது.
முத்துமுகமது மீதான இசுலாமிய கட்சித்தலைவர் எம் எச் எம். இஸ்ஹாக்கின் கரிசனை எதனால் உருவாகிறது என்று யோசித்தால், அவனின் விசுவாசம் என்றே தோன்றுகின்றது. எதையும் மறைக்காமல் தலைமைக்கு விசுவாசமாக இருக்கும் தன்மை. தன்னை அற்பனாக கருதி அடிக்கடி பலவீனமான தருணங்களில் தலைவரின் காலில் விழுகின்றான். காலில்விழுதல் மார்க்கத்துக்கு முரணானவொன்றாக இருகின்றபோதும் அவனின் பலவீனங்களையும் விசுவாசத்தையும் காட்ட அதுவொரு குறியீடாகவிருக்கின்றது.
வெறும்விசுவாசம் என்பது கட்சியின் தலைமைத்துவத்தை நோக்கிச்செல்வதற்கே போதுமானதாக இருக்குமா என்பதை யோசிக்கும்போது இல்லை என்ற பதிலே கிடைக்கும். முத்துமுகமதுவின் தனித்திறன்கள் மீதான பார்வையை செலுத்தும்போது அவை பாத்திரச் சித்திகரிப்பில் விடுபடல்களை காட்டுகின்றது. அவனின் சமூகத்தின் மீதான பார்வையும், புரிதல்களும் ஊகித்தறிய முடியாமல் இருக்கின்றன.  ஒட்டுமொத்தமான நாவலாக படிக்கும்போது கதை நாடகீயத்தனமாக இருப்பது நாவலின் பெரிய குறைபாடாக இருகின்றது. ஆனால், இசுலாமிய பண்பாட்டுச்சூழலை எழுத்தில் கொண்டுவந்திருப்பது இவ்நாவலின் பெரும்பலமாக இருகின்றது.
தனது உம்மாவை மத்தியகிழக்கு நாடு ஒன்றில் வேலை வாங்கித்தருவதாகக்கூறி கொழும்புக்கு அழைத்துச்சென்று பாலியல் சேட்டை புரிந்து, அவளை தற்கொலை நோக்கித் தள்ளிய சப்புசுல்தானைக் சொலைசெய்ய அவரின் மகனான அன்வர் முயற்சிக்கிறான். சப்புசுல்தானை பழிவாங்கும் நோக்கில் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைகின்றான். அங்கே அன்பு என்ற பெயரில் போராளியாக மாறுகின்றான். விடுதலைப்புலிகளின் லட்சியத்துக்காக அன்றி வேறு காரணங்களுக்காக இசுலாமியர்கள் புலிகளில் இணைந்தார்கள் என்ற சித்திரத்தை அது வழங்க முற்படுகின்றது. அது அந்தப் பாத்திரந்தின் தனித்துவமான தன்மையாக இருக்கலாம். ஆனால், விடுதலைப்புலிகளின் இலட்சியத்தை ஆதரித்து அவ்வமைப்பில் இணைந்த இசுலாமியர்களைப் பற்றி நாவல் பேசவில்லை.
ஒரு காதல்கதையை அரசியலின் புறச்சூழலைக் கலந்து நகர்த்திச்செல்கின்றார். உதிரிகளாக புலிகள் இசுலாமியர்கள்மேல் நிகழ்த்திய படுகொலைகளைப் பற்றிச் சொல்லப்படுகிறது. ஆங்காங்கே கர்த்தால்கள் கடையடைப்புக்கள் நடக்கின்றன. புலிகள் இராணுவத்தின்மீது நடத்திய தாக்குதல்களில் சாதாரண இசுலாமியர்கள் மீது ஏவிவிடப்பட்ட வன்முறையை, அதன் பக்க விளைவுகளை இந்நாவல் முற்றிலுமாக பதிவுசெய்யவில்லை. ஒரு காதல் கதையில் உதிரியான சம்பவங்களாக சிலவற்றை சொல்வதோடு கதை முடிகிறது.
உரையாடல்கள் நாவலுக்கு பெரும்பலம் சேர்கின்றன. ஏனைய புறச்சூழலின் வர்ணனைகள், உணர்வுகளின் வர்ணனைகள் இல்லாமல் வெறும் உரையாடல்களின் நீட்சி பாத்திரங்களின் உணர்ச்சி நிலைகளைத் தடங்கள் இன்றி வாசிப்பவருக்கு ஒப்பேற்றுகின்றது.
இந்நாவல் பத்திரிகையில் தொடர்கதையாக வெளியாகியது. மொத்த  வடிவம் தொடர்கதைக்குரியதாக இருந்தும், ஒட்டுமொத்தமாக நாவல் வடிவில் கொண்டுவரும்போதும் கிடைக்கும் நாவல் எனும் அனுபவம் பூரமணமாக கொல்வதெழுதலில் இல்லாமல் இருகின்றது. ஆனால், அதன் விடுபடல்கள் நாவலை தரம் தாழ்த்தும் வண்ணம் இல்லை. எளிய கிராமத்து இளைஞனின் அப்பாவி அகத்தை உரையாடல் மூலம் வெளிக்கொணர்வதில் இதன் அழகியல் வென்றதாகின்றது.
அனோஜன் பாலகிருஷ்ணன்
Leave a Reply


Tuesday, June 28, 2016

சிவராசா கருணாகரன்

ஆர். எம். நௌஷாத்தின் “கொல்வதெழுதுதல்
ஷோபாசக்தியின் “BOX “ கதைப்புத்தகம்
ஆகிய பிரதிகள் மீதான வாசிப்பு
JULY நடுப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் நடக்கவுள்ளது.
விவரங்கள் விரைவில்....

Friday, May 13, 2016

கிண்ணியா சபருல்லாஹ்


 பிரளயமெனப் பெருக்கெடுத்த அரசியல்  கொல்வதெழுதுதல் 90--  


கிண்ணியா  
சபருள்ளாஹ் 
000


கட்டிலில் சரிந்து கிடந்த்து சப்பு சல்தானின் உடல்…..கால்கள் அலங்கோலமாய்க் கிடந்தன…….கை முதுகின் கீழே மடிந்திருந்தது. பனியன் சட்டையில் பச்சை இரத்தம் ஊறிப்பரவிக் கொண்டிருந்த்து. சாரம் உரியப்பட்டு இடுப்பின் கீழ் இரத்த வெள்ளம்….தலை நிமிர்ந்து கண்கள் முண்டையாகத் தள்ளி, வாயில்……..ஈ……..இ…தென்ன…..வாயினுள்…எ….ன்ட …..அல்லோவ்….வாயினுள் திணிக்கப்பட்டிருந்தது அவனது ஆண் குறி…..என்டம்மோவ்…”

என்டம்மோ…என்ட யா ரப்பே என்னப் படச்ச ரஹ்மானே என்று கழுத்தில் திடீர் வேளாண்மை செய்யப்பட்டிருந்த வியர்வையை துடைக்க வழியில்லாமல் நமது ஆண் குறி கிரிஸ் கத்தி பட்டு சேதாரப்படாமல் இருக்கின்றதா என்று சந்தேகத்தோடு ஒரு தடவை தொ………..ப்பார்த்துக் கொண்டு மரக்கதிரையில் சாய்ந்து கிடந்த எனது கையில் காலச்சுவடு பதிப்பாக வந்து தீரன் நௌஷாதின் “கொல்வதெழுதல் 90” கையிலே இருந்தது.

நாவலின் 157ம் பக்க்த்தில் சதாவும் குறி விரைக்கச் செய்து வெளி நாட்டுக்கு அனுப்புகின்றேன் என்ற போர்வையில் இளம் பெண்களை வேட்டையாடிக் கொண்டிருந்த சப்பு சுல்தானின் கோல்ட் ப்ளட்டட் மேர்டரில் (COLD BLOODED MURDER) எனது இரத்தத்தை ஃப்ரீசரில் வைத்து தொடர்ந்தும் வாசித்து நாவலை முடித்த போது மண் குடத்துத் தண்ணீரை எடுத்து தொண்டைக்குள் ஒரு கனம் சரித்துக் கொண்டு திகிலுக்கு தொண்டு செய்தேன்.

இலங்கையின் தமிழிலக்கிய பரப்பில் என்றென்றும் கவனயீர்ப்புப் பட்டியலில் இருக்கின்ற மிக முக்கியமான நாவல்களுல் தீரன் நௌஷாதின் கொல்வதெழுதல் 90 ம் இருந்து வருகின்றது என்பது எண்பிக்கப்பட வேண்டியதொன்றல்ல. போர்க்காலத்தின் கிழக்கிலங்கை முஸ்லிம்களது துயரங்களின் டிஜிட்டல் ஆவணமது.

1990களில் கிழக்கிலங்கையில் கழுத்தறுத்து பீறிட்டுப்பாய்கின்ற குருதியில் நின்று கொண்டு கதகளி ஆடிக் கொண்டிருந்த ஆயுதப்போராட்டத்துக்குள், ஒரு திசையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் ருத்ர தாண்டவம், இன்னோர் திசையில் இலங்கை ராணுவத்தின் அதிகாரப்பாய்ச்சலில் மின்னுற்பத்தியாகிய ஆலகாலம், இன்னோர் பக்கத்தில் இனந்தெரியாத ஆயுதக் குழுக்கள், மறு பக்கத்தில் கள நிலைமையை சரியாக பயன்படுத்திக் கொண்டு ஊரையே கபளீகரம் செய்து கொண்டிருந்த கொள்ளைக் கூட்டம் என திரும்புகின்ற எல்லாத்திசைகளிலும் அச்சத்தின் உச்சமும், திகிலின் தீம் தரிகிடதோமும், உத்தரவாதம் வழங்கப்படாத இருப்பின் கேள்விக்குறியுமென நகர்ந்து கொண்டிருந்த இருட்டின் நிழலில் எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு அடியும் கன்னி வெடிக்கு காணிக்கையாக்கப்பட்டு விடுமோ என்று வாழ்வை அஷ்ட கோணலாக்கிய அந்தக்காலப்பகுதியில் கிழக்கின் அம்பாறை மாவட்டத்தின் பள்ளி முனைக்கிராமத்தினை புலமாக்க் கொண்டு தீரன் இந்த கொல்வதெழுதல் 90 னை நம்மிடம் கொண்டு சேர்த்திருக்கின்றார்.

1990களில் சுவாசம் செய்து கொண்டிருந்த ரெத்ரங்களை பின்னணியாக்க் கொண்டு இந்த நாவல் எழுதப்பட்டாலும் பள்ளி முனைக்கிராமத்தின் கதை என்ற பெயரில் 2003ம் ஆண்டு முஸ்லிம் குரல் பத்திரிகையில் தொடராக வெளிவந்து கொண்டிருந்தது. எனினும் காலச்சுவடுப்பதிப்பாக 2013ம் ஆண்டு வெளி வந்த்து. போர்க்கால முஸ்லிம் தேசத்து இலக்கியத்தினைனப் பொறுத்த வரை குருதியின் வெண் குருதி சிறு துணிக்கை மாதிரித்தான் இந்த கொல்வதெழுதல் 90. போர்க்கால முஸ்லிம்களின் இரத்தத்தால் எழுதப்பட்ட துயர் காட்டாறாய் பிரவகிக்கின்ற வலராற்றை கவிதைகளாக கதைகளாக பலர் பதிவு செய்திருந்தாலும் நாவல் என்ற வகையில் முழுக்க முழுக்க என்று இல்லா விட்டாலும் ஒரு பெரும் பகுதியை பதிவு செய்வதில் ஓரளவு வெற்றி கண்டிருக்கின்றார் இந்த நாவலூடாக தீரன்.

தீரனின் இந்த நாவல் போர்க்காலத்தில் கிழக்கு முஸ்லிம்கள் அனுபவித்த கொடுமைகள் பற்றி பேசுகின்றது என்பதனை விட ஆவேசத்தை ஊடறுத்துக் கொண்டு அந்தரத்தில் ஆடிய போர்க்காலத்துக்குள் பிரளயமெனப் பெருக்கெடுத்த அரசியல் பற்றியே பிரதானமாகப் பேசுகின்றது.

யுத்த்த்துக்கு எந்த வித சம்பந்தமுமில்லாத ஆயதங்களின் அகர வரிசை கூடத் தெரியாத முஸ்லிம்கள் மீது கட்டற்ற வன்முறையினை எல்லாத்தரப்பும் கட்டவிழ்த்து விட்ட காலப்பகுதியில் முஸ்லிம்களுக்கென்று மரக்கட்சியை தாபித்து அதனூடாக அபாயங்கள் நிறைந்த பாதையில் வழிந்தோடிய கட்சிப்போராளிகளின் குருதியைம் வியர்வையையும் மரத்தின் ஆணி வேருக்கு காணிக்கையாக்கி “நாளே தக்பீர்” கோஷத்தோடு முஸ்லிம்களின் உணர்ச்சிப்பிழம்பில் தீ வள்ர்த்த மறைந்த தலைவர் அஷரபினை அழைத்து வந்து அவருக்குப் பின்னால் அதோ தெரிகின்றான்…அவன்தான் முத்து முகம்மது. சாதாரண கிராமத்தான்.

தனது கிரமத்தையும், தனக்கு வருங்காலத் துணையாக வர இருக்கின்ற கிளிக்குஞ்சு மைனாவையும் தவிர வேறெதுவும் தெரியாத வெகுளிப்பய புள்ள. அந்த முத்து முகம்மது இளைஞனை ஆதாரமாக வைத்து ஒரு போர்க்கால அரசியல் நாவலை தீரன் கொல்வதெழுதல் 90ல் தந்திருக்கின்றார்.

போரின் கூரிய பற்களால் வேட்டையாடப்பட்டுக் கொண்டிருக்கும் தனது அழகிய கிராமத்தையும், தனது கனவுக்காதலி மைமுனாவையும் அவ்வப்போது உதடுகளில் செருகிக் கொள்ளுகின்ற பீடிகளையும் தவிர வெளியுலகே தெரியாத ஒரு அப்பாவி இளைஞன், பாடசாலைக்காலத்தில் சுற்றுலா சென்று கூட கொழும்பை பாத்திராத ஒரு பட்டிக்காட்டான், “நம மொகக்த” என்று கேட்டால் கூட பயந்து போய் எல்லா எலும்புகளிலும் அல்ப்ஸ் மலைக்காற்று வந்து கூடாரம் அடித்துக் கொள்ளுகின்ற கிலிக்காரன், என்று எல்லாவிதமான அப்பாவித்தனமான கரக்டர்களையும் தனக்குள்ளே தக்க வைத்துக் கொண்டிருக்கின்ற முத்து முகம்மது என்ற இளைஞன் மக்களின் பிரதிநிதியாக பாராளுமன்றம் செல்லுகின்ற வரலாற்றினை தீரன் சொல்லி முடிக்கின்ற போது அடி மட்ட அரசியலையும் அதன் பின்னரான உயர்மட்ட எழுச்சினையும் பார்த்து பரவசம் பெற்றுக் கொண்தனை விட நான் கற்றுக் கொண்டது கனக்க.

இந்த நாவலை முழுக்க முழுக்க தீரன் அம்பாறை மாவட்டத்தின் முஸ்லிம் கிராமங்களுக்கென்று பிரத்தியேகமாக உள்ள ஸ்லேங் (SLANG) என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் ஊர்ப் பாஷையிலேயே எழுதியிருக்கின்றார். ஒவ்வொரு பாத்திரமும் உரையாடுகின்ற போது அந்த ஸ்லேங்கை அதி அற்புதமாக தீரன் பயன்படுத்தி இருக்கின்றார். நாவலின் ஒரு இடத்தில் கூட அந்த ஸ்லேங் மிஸ்ஸாகி விடக்க கூடாதென்ற அதி பதுகாப்புக் கவன வலயத்துக்குள் தீரன் அகப்பட்டுத் துடிப்பதனை பாத்திரங்கள் உரையாடுகின்ற போது அவதானித்தேன்.

மண்வாசனை மூக்கின் துவாரங்களில் பன்னீர்ப்பூ வாசனையை பதிவிறக்கம் செய்து விடுகின்றது.

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கு இந்த ஊர்பாஷை அல்லது ஸ்லேங் லேசில் புரிந்து விடும் என்றாலும் கிழக்கு மாகாணத்தைத் தாண்டி வெளியில் வாழ்கின்ற வாசகர்கள் இந்த நாவலை வாசிக்கின்ற போது அவ்வப்போது சில பல சிரமங்களுக்க ஆளாவார்கள் என்பது மட்டும் நிச்ச்யம். எனினும் தான் சார்ந்த மண்ணையும் அதன் மாந்தர்களையும் ஆவணப்படுத்த எத்தனிக்கின்ற எந்த ஒரு எழுத்தாளனும் அந்த மண்ணின் மரபையும் அந்த மக்களது பிரத்தியேக பாஷையையும்; ஒரு புறம் ஒதுக்கி வைத்து விட்டு எதனை எழுதிக் கிழித்தாலும் அது தோல்வியின் மூத்திரச் சந்திலே முட்டிக் கொண்டு நிற்கும் என்பது மகா உலக யதார்த்தம்..

தீரன் இந்த நாவலில் எந்த மண்ணை தனது எழுத்துக்குள் கொண்டு வர வேண்டுமென்று நினைத்தாரோ அதனை மிகச் சரியாக நிறைவேற்றியிருக்கின்றார். இந்த நாவலை வாசிக்கின்ற எவருக்கம் எளிதில் புரிந்து விடக் கூடிய சூத்திரம்…இது அம்பாறை மாவட்டத்தின் ஒரு முஸ்லிம் கிராமத்தின் கதை என்பது.

பள்ளிமுனைக்கிராம்ம், முத்து முகம்மது, மைமுனா, அவளது தாய், மைமுனாவின் தம்பி யாஸின் பள்ளித்தலைவர், சப்பு சுல்தான், இஸ்லாமியக்கட்சித் தலைவர் எம் எச் எம். இஸ்ஹாக், உதுமான், தேநீர்க்கடை நெய்னார், செய்லான் ஹாஜி, உதுமான் மகன் அன்வர் என்று ஒவ்வொரு பாத்திரப்டைப்புளுக்கும் உரிய அழுத்தங்களை வழங்குகின்ற அதே நேரம் அந்தந்த பாத்திரங்களின் தராதரங்களையும் குவாலிட்டிகளையும் அவர்கள் பேசுகின்ற போது பாவிக்கின்ற சொற்களுக்குள்ளாக விளங்கப்படுத்துகின்ற வித்தைக்குள் தீரன் கம்பு சுத்துகின்றார்.

பொதுவாகவே நாவல்களில் நடமாடுகின்ற பாத்திரங்கள் பற்றி நேரடியாக கிரிக்கெட் வர்ணனை புரியாமல் அவர்களது போக்கிலேயே விட்டு விட்டு அவர்கள் பேசுவதனூடாகவும், அவர்களைச் சுற்றி நிகழ்கின்ற சம்பவங்களூடாகவும் அவர்கள் பற்றிய கரக்டர் நிலைகளை கதையாடுவது ஒரு நல்ல உத்தி. அவ்வாறு இல்லா விட்டால் கட்டுரை வடிவுக்குள் நாவல் சிக்குண்டு நாலின் தன்மையை அழித்து வாசகனுக்குள் ஒரு விதமான சலிப்பையும் அலுப்பையும் கொடுத்து விடும். தீரனின் இந்த கொல்வதெழுதல் அந்த அபாய வளைவுகளிலிருந்து தப்பிச் சென்று தன்னை பாதுகாத்துக் கொள்ளுகின்றது.

குறிப்பாக முத்து முகம்மதுவின் பாத்திரப்படைப்பு…ஒற்றை சொல்லில் அபாரம். இலட்சியங்களில்லாத வாழ்க்கை, மைமுனா மட்டும் தனக்குப் போதும் எனும் மனோநிலை, காதலின் கன்னத்துச் சிவப்பு நாணங்களும் மோனங்களும், துரத்தித் துரத்தி அடிக்கின்ற துரோகங்களும், அடி மட்ட இளைஞன் சூழ்நிலைகளாலும் அவனது தலைமைத்துவ விசுவாசத்தாலும் பாராளுமன்றம் வரை செல்லுகின்ற மெஜிக்கல் முரண்கள், பள்ளி முனை தொடக்கம் கொழும்பு வரையான முத்து முகம்மதுவின் அப்பாவித்தனங்களும், பழி வாங்க வேண்டுமென்று அறுபட்ட சேவலாய் துடிக்கின்ற அவனது கொதித்த ரத்த்தமும், நாலா பக்கமும் குண்டுகளை கென்யோ மாரக்கில் வைத்துக் கொண்டு குதறி எறியக்காத்திருக்கின்ற புலிகளுக்கும் ராணுவத்துக்குமிடையே முஸ்லிம்களுக்கான கட்சியை அனு அனுவாய் வளர்த்தெடுக்கின்ற நெருப்பு நிமிஷங்களுமென கொல்வதெழுதல் கொளுந்து விட்டெறிகின்றது.

பதவிகள் பற்றியே கனவுகள் காணாத ஒருத்தனை “நான் கொடுக்க நினைப்பதனை எவர் தடுத்து விட முடியும்” என்று சொல்லுகின்ற அல்லாஹுத்தஆலா தெரிவு செய்து பாராளுமன்றம் வரை போய் வா மகனே என்று அனுப்புகின்ற போது இந்த நாவலை நான் ஒரு ஃபென்டஸியாகவோ அல்லது மெஜிக்கல் ரியலிசமாகவோ பார்க்கவில்லை. மாற்றமாக இது ஒரு ரியலிசம். சத்தியத்தின் முன்னே எழுந்து நடமாடுகின்ற சாத்தியஙகள். தலைமைத்துவங்களை வழங்கவது அல்லாஹுத்தஆலா என்பதனை ஹை லைட் பண்ணுகின்றார் தீரன். உண்மைதானே.

தலைவர் அஷ்ரபின் தோளில் மிகப் பெரும் பாரமாக குந்திக் கொண்டிருந்த முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சியில் தலைமைத்துவ விசுவாசம் என்பது ஒரு சாதாரண போராளியை அரியனை வரை கொண்டு செல்லுகின்ற அற்புதத்தை நிகழத்தியிருக்கின்றார். அரசயிலில் தலைமைத்துவ விசுவாசம் பற்றி பாடம் எடுக்கின்றார் நௌசாத்.

தலைவருக்காக உசிரையே கொடுக்கத் தீர்மானித்து விட்ட முத்து முகம்மதுவுக்கு தனது பதவியையே பரிசாககக் கொடுக்கின்ற தலைவரின் ஒவ்வொரு வார்த்தையும், அவரது உரையாடலும், அவரது தீர்மானங்களும் அமைச்சர் அஷ்ரபை மனசுக்குள் வழிய விட்டுக் கொண்டிருந்தது. அதிரடி முடிவுகளின் ராஜகுமாரனாயிற்றே அஷ்ரப்.

தனியே தலைமைத்துவ விசுவாசமும் அவருக்காக உசிரையே கொடுக்கின்ற அவர் மீதான அதியுச்சக்காதலும் மாத்திரமே பாராளுமனற்ம் வரை செல்லுவதற்கு ஒரு தனி நபருக்க தகுதியாக மாறி விடுமா என்ற கேள்வி எனக்குள் எழும்பிக் கொண்டேயிருக்கின்றது. எனினும் பதவிக்காக ஜால்ரா போட்டுக் கொண்டு அதனையே குறி வைத்துக் கொண்டு தலைமைத்துவ விசுவாசம் என்ற பெயரில் செவாலீயே சிவாஜியாக மாறி நடிப்பின் உச்சங்களைத் தொட்டுக் கொண்டு வளைய வருகின்ற முதுகு சொறிகின்ற மொக்குகளுக்கு மத்தியில் முத்து முகம்மது போன்றவர்கள் மக்கள் பிரதிநிதியாக பொறுத்தமானவர்கள்தான். .

ஆனாலும் இந்த நாவலில் தலைவரின் கால்களில் படீர் படீரென்று விழுவது, எடுத்த்தற்கெல்லாம் அவ்லியாக்களையும் முகைதீன் ஆண்டகையையும் அழைப்பது என்று மார்க்கத்துக்கு முரணானதும் முற்றிலும் ஷிர்க்கானதுமான விடயங்களை பல இடங்களில் தீரன் பரவ விட்டிருக்கின்றார். எனினும், முழுப்பள்ளி முனைக் கிராமமுமே ஹுப்புல் அவ்லியாக் கொள்கைகளை வரித்துக் கொண்டு முகைதீன் ஆண்டகைகளை என்ட ரப்பே என்று கையேந்தி பிரார்த்தனை புரிந்தார்களா என்ற சந்தேகம் வருகின்ற போது ஊரில் மார்க்கத்துக்கு முரணான மரபுகளை உடைத்தெறிந்து தௌஹீதை நிலை நாட்டுகின்ற ஒரு சிறு கூட்ட்மெனும் இல்லையா என்பதனை தீரன் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. அல்லாஹ் ஒருத்தனே அனைத்துக்கும் போதுமானவன் எனற கொள்கையோடு ஒரு முஸலிம் என்ற நிலையிலிருந்து இந்த நாவலை வாசிக்கின்ற போது மனசுக்குள் இந்த ஹுப்புல் அவ்லியா கொன்சப்ட் கொலை மிரட்டல் விடுக்கின்றது.

தனது உம்மாவை வெளி நாடு அனுப்புகின்றேன் என்று கொழும்புக்கு அழைத்துச் சென்று அவளை நாசமாக்கியதன் விளைவாக அந்த அப்பாவிப் பெண் தற்கொலை செய்கின்ற போது, அவளது கன்னி வெடியில் காலிழந்த கணவன் உதுமானையும், தனது தாயை இந்த நிலைக்கு ஆளாக்கிய சப்பு சுல்தானை பழி வாங்கும் ஒரே நோக்க்த்துக்காக இயக்கத்தில் போய்ச் சேருகின்ற அன்வர் எனும் அன்பையும் விவரிக்கின்ற போது போரின் ரௌத்ரத்தினை பயன்படுத்திக் கொண்டு பற்றி எரியும் வீட்டில் சிகரெட் பற்ற வைத்துக் கொண்ட கொடுங்கோலர்களையும், போரின் எச்சங்களான முஸ்லிம் சமூகத்தின் அவலத்தையும் தீரன் சொல்லும் போது மனசுக்குள் தீ.

தனது தாயை இந்த நிலைக்கு ஆளாக்கியவனை பழி வாங்கும் ஒரே நோக்கத்துக்காக இயக்த்தில் சேருகின்ற அன்வர் மாதிரி எத்தனை முஸ்லிம் இளைஞர்கள் புலிகளின் இயக்கத்தில் வெவ்வேறு காரணங்களுக்காக இணைந்து கொண்டு ஆயதம் தூக்கினார்களோ என்று யோசிக்க வைக்கின்றார்.

ஒரு காதல் கலந்த அரசியல் கதையை நகர்த்திச் செல்லும் போக்கில் உதிரிகளகவே புலிகள் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விட்ட படுகொலைகள், ஆட் கடத்தல்கள், சொத்து சூறையாடல்கள் போன்றவற்றை போகின்ற போக்கில் தீரன் பதிவு செய்கின்றார்.

அது போல ஆங்காங்கு டயர் எரிப்பகள், ஹர்த்தால்கள் மற்றும் கடையடைப்புகள் ஆகியவும் உதிரிகளாகவே தெரிகின்றன. யாருக்கோ யாருக்காகவோ நடந்த போரில் யாருக்கம் சம்பந்தமற்ற முஸ்லிம்கள் மீது ஏவி விடப்பட்ட போரின் பயங்கரத்தினை முற்றிலுமாக தீரன் இந்த நாவலில் பதிவு செய்யவில்லை என்பதனை நாவலை நுணுக்கமாக வாசித்துப்பார்த்த்தால் புரியும். எனினும் தொண்ணூறுகளில் கிழக்கில் எப்பேர்ப்பட்ட அபாயகரமானதும், அதி பயங்கரமானதுமான விஷச் சூழல் முஸ்லிம் சமூகத்தின் கழுத்தினை ஒரு அனகொன்டாவாக சுற்றிக் கொண்டிருந்த்த்து என்பதனை அச்சத்தோடு சொல்லுகின்றார். அச்சத்தோடு யாரும் வர மாட்டார்களா என்று அமேசன் காடுகளில் சுற்ற்த்திரிகின்ற அனுபவத்தினை தருகின்றார்.

எதுவுமே தெரியாத ஒரு அப்பாவி இளைஞன் தலை நகரின் தெருக்களில், தலை நகரின் அச்சமிகு சூழலில் மெல்ல மெல்ல உலகத்தை கற்றுத் தேருகையல் அனுபவத்தினூடாக அவன் அடக்கியாளுகின்ற அனுபவத்தினை கற்றுக் கொள்ளுகின்றான் என்பதனை முத்து முகம்மது ஊடாக புரிய வைக்கின்றார் நௌஷாத். அனுபவங்களும் போராட்டங்களும் எப்போதுமே பேப்பர் கொலிஃபிக்கேஷன்களை விட கனதியானது. அனுபவத்தினை விட வாழ்க்கையை ஆழமாக்க் கற்றுத் தருகின்ற வேறு இருக்கின்றதா இந்த பிரபஞ்சத்தில்.

ஒரு கட்சியில் ஏலவே நான் சொன்னது போல உண்மையானதும், நேர்மையானதுமான விசுவாசமும், தலைமைத்துவத்தின் மீதான காதலும் ஒரு போராளியை கொண்டு செல்லுகின்ற தூரத்தை அளவீட செய்கின்றது இந்த நாவல்.

முஸ்லிம் காங்கிரஸில் அரசியல் செய்ய ஆசைப்படுகின்ற ஒவ்வொருவருக்கும் இது ஒரு கைட் லைன். ஆனாலும் சிதைவுகளின் அரண்மனையாகிப் போன இன்றைய முஸ்லிம் காங்கிரஸ், ரத்தமும் வியர்வையும் ஊற்றி வர்த்தெடுத்த அந்த விருட்சம் இன்று பாம்புகளின் புற்றுகளுக்காகவும், பல்லிகளின் வாசஸ்தலங்களுக்காகவும், ஓணான்களின் வேலிகளுக்காகவும், பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது. தலைவர் அஷ்ரப் வளர்த்த மரத்தின் வேர்களில் எப்போதோ மண்ணெண்ணெய் ஊற்றியாச்சு. இன்று அஷ்ரபும் இல்லை….முத்து முகம்மதுவுமில்லை. பொராளிகளுமில்லை.

என்னதான் பதவிகள் வந்து சேர்ந்தாலும் ஒரு பெண்ணின் மீதான அடங்காக்காதலும் தீராத அன்பும் மட்டுமே மனசுக்குள் எஞ்சிப் போயிருக்கும். தன்னால் அதீதமாக காதலிக்க்ப்படுகின்ற மைமுனாவின் நினைவுகளில் சதாவும் அலையின் துரும்பென அல்லாடும் முத்து முகம்மது தனது உசிரை நாசமாக்கிய சப்பு சுல்தானை கொன்று தீர்க்க வெறியோடு கிளம்புகையில் நேர்மையான காதல் கத்தியும் தூக்க வைக்கும் என்று கதை சொல்லுகின்றார் நௌஷாத்.

ஆயுதங்கள், படுகொலைகள், எரியும் டயர்கள், நெருப்புக்கு நடுவே நாட்டப்படும் முஸ்லிம்களுக்கான கட்சி மரம், தலை மரத்துப் போகச் செய்யும் ஹர்த்தால்கள், குண்டு வெடிப்புகள், அரசியல் படுகொலைகள், ஆட் கடத்தல்கள், தலைமைத்துவப் போட்டிகள், வன்மங்கள், சுயநலங்கள், துரோகங்கள், வறுமையின் சிவந்த நிறங்கள், கற்பு சூறையாடல்கள், எரியும் வீட்டில் லாபம் பிடுங்கும் பிணந்தின்னிகள்………இத்தனைக்கும் நடுவே ஒற்றையாக பூத்து நிற்கின்ற வெள்ளை ரோஜாவென அழகான காதல் என்று கதையை கெரில்லாக்கள் நடமாடுகின்ற கொட்ஸில்லாக் களத்தில் ஆரம்பித்து சின்ட்ரெல்லாக் காதலை கூட்டி வந்து த்ரில் பண்ணும் தீரன் போகப் போக திகில் தருகின்றார்.

“கொல்வதெழுதல் 90” தொண்ணூறுகளின் கிழக்கு முஸ்லிம்களையும் அவர்களது துயரங்களையும் அரசியலையும் பதிவு செய்துள்ள சுவடிக் கூடம்.

கொடூரமாகக் கொல்லப்பட்டு வீட்டின் விட்டத்தை வெறித்தவாறு பார்த்துக்கிடக்கின்ற சப்பு சுல்தானும், அவனது வாயினுள் திணிக்க்பட்டிருக்கின்ற அவனது அறுக்கப்பட்ட ஆண் குறியும் கொஞ்ச நாளைக்கு இனி கனவில் வந்து என்னை கொல்வதெழுதல் செய்யப் போகின்றது.

கிண்ணியா சபருள்ளா
2016-05-14
Like
Comment

Friday, April 8, 2016

அஸ்ரப் சிஹாப்தீன்

                                           Ashroff Shihabdeen
பொதுவாகவே இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தின் வாழ்வியல் நெருக்கடிகள், ஒரு சிறுபான்மைச் சமூகமாக அதன் இருப்பியல் வரலாறு குறித்த இலக்கியப் பதிவுகள் எழுதப்படவில்லை என்ற கவலை முஸ்லிம் சமூக ஆர்வலர்களுக்கும் கல்வியியலாளருக்கும் ஓர் உறுத்தலான அம்சமாகவே இருந்து வருகிறது. அந்தக் கவலையை ஒரு சிறு அளவிலேனும் குறைக்கும் பணியை தீரன் ஆர்.எம். நௌஷாத்தின் “கொல்வதெழுதல்“ நாவல் தீர்த்து வைத்திருக்கிறது என்பேன்.
“கொல்வதெழுதல் - 90” நாவலின் ஒரு மேலதிகப் பிரதி என்னிடம் உண்டு. ஒரு பிரதியை எல்லோருக்கும் கொடுக்க முடியாது. கேட்பவர்களில் நான் தீர்மானிக்கும் ஒருவருக்குக் கொடுக்கலாம் என்றிருக்கிறேன்.

Roomy Mohamed Mujas எனக்கு தர முடியுமா????



H.F. Rizna கிடைக்குமா?



நூறுல் ஹக் முதல் தந்ததை தொலைத்துவிட்டீர்களா?



Basheer Ali நீங்கள் தெரிவுசெய்யும் ஆளாக நானிருந்தால் சந்தோசம்
.
மற்றவர்களுக்குக் கொடுத்து அவர்கள் என்னைவிட


பிரயோசனப்பட்டால் அதைவிட ஹெப்பி.



Ameen Zami Include me also



Razana Manaf துண்டுச்சீட்டு எழுதிப்போட்டு தெரிவு செய்யுங்க




மறக்காம எனது பெயரையும் ஒரு சீட்டில் எழுதிக்கொள்ளுங்க.



Mohamed Sabry இன்ஷா அல்லாஹ் கிடைக்கலாம்
.

Ramees Deen நல்ல தகவல்.வாழ்க வாழ்கவே எங்கள் தீரன் சேர்.



Shafraz Buhary அந்த லிஸ்டில் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள்



Mahdy Hassan Ibrahim Yelam pottaa yenna? Kolvadhezhudhal- oru tharam!


Rendu tharam! Moonaam tharam apramaa solvom!




Mohamad Buhari Naleem என்னிடம் தந்தால் வாசித்துவிட்டு

நீங்கள்சொல்பவரிடம்கொடுத்துவிடலாம்




நூறுல் ஹக் தீரனுக்கு கொடுத்தால் உதவியாக இருக்கும்




Mohamed Sanzeir நானும் தான் .எனக்குத் தாருங்கள் என்று கேட்கிறேன்
.

தரவா போகிறீர்கள்....?


Sajath Cassim நீங்கள் தெரிவுசெய்யும் ஆளாக நானிருந்தால்


சந்தோசம்.



Jamaldeenm Shamil ARUMAIYAANA THALAIPPU please let me know which


bookshop can i buy a copy



Vellathamby Ahamed JUnaid நிரம்பல்


அரிதானதொரு


நிறை போட்டி


சந்தை...


ஓரத்தில் ஒதுங்கிநின்று


கேள்வி


தொடுக்குமிவன் உரு
,


தென்படுமோ


அவன் கண்ணுக்கு




எண்படுமோ,...?




Rauf Hazeer வாசித்துவிட்டு தந்துவடுகிறேன்




Mansoor A Cader Noushard reflecting the real phase of life. He will be salvated
.



Mohamed Sarook Abdul Azees சவுதிக்கு வருமா என்று பார்போம்




Jamal Niyas இத்தனை கேள்வியிருந்தால் பிரதிகள் பண்ணலாமே
.



தீரன். ஆர்.எம் நௌஷாத் அதைப் பெறுவதற்கு


மிகவும்பொருத்தமானவன் நானே....


Ashroff Shihabdeen



Jamal Niyas வருத்தமான சேதி.



தீரன். ஆர்.எம் நௌஷாத் இதுபொருத்தமானசேதி


...